என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் மலைப்பகுதியில் போராட்டம்
Byமாலை மலர்19 Feb 2021 12:03 PM GMT (Updated: 19 Feb 2021 12:03 PM GMT)
வத்திராயிருப்பு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ்மக்கள் மலைப்பகுதியில் குடியேறினர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே உள்ள ராம்நகர் பகுதியில் 65-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்குச் செல்வதற்கு தார் சாலை வேண்டும்.
பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சதுரகிரி மலை பாதையில் கடைகள் அமைக்கவும், வனப்பகுதியில் தங்களது ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதி கோரியும் நேற்று பார்ப்பனத் அம்மன் கோவில் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வத்திராயிருப்பு தாசில்தார் அன்னம்மாள், இன்ஸ்பெக்டர் சுபக்குமார், வனச்சரகர் மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பகுதியில் குடியேறிய மலைவாழ் மக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதையடுத்து கோரிக்கைகள் அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி வாங்கி தரப்படும் என அவர்கள் கூறினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மலைவாழ் மக்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X