என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
விபத்தில்லாமல் பஸ்களை இயக்கிய டிரைவர்களுக்கு விருதுநகர் வட்டார போக்குவரத்து அதிகாரி பரிசு வழங்கிய காட்சி
சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா - சிறந்த போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பரிசு
By
மாலை மலர்18 Feb 2021 2:20 PM GMT (Updated: 18 Feb 2021 2:20 PM GMT)

சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விருதுநகர்:
விருதுநகர் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் 32-வது சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா விருதுநகர் ்பஸ் நிலையத்தில் நடைபெற்றது. மண்டல பொது மேலாளர் சிவலிங்கம் தலைமையில் நடந்த இந்த விழாவில் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணகலா, போக்குவரத்து கழக அதிகாரிகள் மாரிமுத்து, சுப்பிரமணியன், ரோட்டரி சங்க தலைவர் வடிவேல், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகுசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணகலா ஆகியோர் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசியதுடன் வாகன ஓட்டிகளுக்கு அதுபற்றி விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய சிறந்த ஓட்டுனர்களாக தேர்வு செய்யப்பட்ட செந்தில்குமார், சுப்பையன், ரகுபதி மற்றும் பயணிகளுடன் கனிவாக நடந்து கொண்ட சிறந்த நடத்துனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்ராஜ், மாரிமுத்து, வேல் முருகன் ஆகியோருக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் வினிேயாகிக்கப்பட்டது.
இதில் பயிற்சி மைய பொறியாளர் பாலாஜி, பயிற்சி ஆசிரியர்கள் பீமராஜ், சர்க்கரை மற்றும் போக்குவரத்து கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
