என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்புஎண்ணிக்கை 16,606 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்புஎண்ணிக்கை 16,606 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் வரை 4 லட்சத்து 9 ஆயிரத்து 114 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,612 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 16,351 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 30 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    2,200 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இதனைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×