search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுவிற்பனை விவரத்தை நாள்தோறும் ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும்- கலால்துறை உத்தரவு

    அனைத்து சாராய கடைகள், மதுபான உரிமம் பெற்றவர்கள் நாள்தோறும் விற்பனை விவரத்தை ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும் என புதுவை கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கலால் துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து மதுபான கடை உரிமதாரர்களும் கலால் விதிப்படி செயல்பட வேண்டும். அனைத்து சாராய கடைகள், மதுபான விற்பனையகங்கள் மற்றும் குடோன்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் முழுமையாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    குடோன்களில் உள்ள கேமிராக்கள் அனைத்தும் நேரடி முறையில் பார்க்கும் வகையில் கலால்துறை துணை ஆணையர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும். அதுதொடர்பான முழு விவரத்தை வருகிற 20-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

    அனைத்து சாராய கடைகள், மதுபான உரிமம் பெற்றவர்கள் நாள்தோறும் விற்பனை விவரத்தை ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும். இது, வருகிற சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இவ்வாறு சுதாகர் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
    Next Story
    ×