என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரியலூர் மாவட்டத்தில் தேர்தலுக்கு 793 வாக்குச்சாவடி மையங்கள்

    அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 393 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 401 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 794 வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது
    அரியலூர்:

    கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து, கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்திடவும், இடம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் தொடர்பாகவும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 90 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 111 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. அரியலூர் தொகுதியில் 7 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 5 வாக்குச்சாவடி மையங்களும் வேறு வாக்குச்சாவடி அமைவிடத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளன. தற்போது அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 393 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 401 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 794 வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது, என்றார்.
    Next Story
    ×