என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.48 லட்சத்தில் சேவை மைய கட்டிடம் - கலெக்டர் கண்ணன் திறந்து வைத்தார்

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை கலெக்டர் கண்ணன் திறந்துவைத்தார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மையத்தை திறந்து வைத்து கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-

    இந்த மையமானது சூலக்கரை அன்னை சத்யா குழந்தைகள் காப்பகவளாகத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.48லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    இந்த மையத்தின் நோக்கமானது தனிப்பட்ட இடத்திலோ அல்லது பொது இடத்திலோ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தேவைப்படும் ஆலோசனைகளை உடனடியாக அவசர கால அடிப்படையில் எளிதாக பெற ஏற்பாடு செய்வது ஆகும். பாதிக்கப்பட்ட பெண்கள் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு உதவி பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் மையத்தின் மூலம் பெண்கள் பாதுகாப்புக்கான அவசர சேவை மற்றும் ஆலோசனைகள், அவசரகால மருத்துவ வசதி, போலீசாரின் சட்ட உதவி மற்றும் ஆலோசனை தற்காலிகமாக தங்கும் வசதி ஆகிய சேவைகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி சரண், சார்பு நீதிபதி சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சண்முக கனி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மருதுபாண்டி நிஷாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் திருவாசகமணி, சமூகநலத்துறை அலுவலர் இந்திரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் ரேச்சல்அருமை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×