என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அரியலூர் மாவட்டத்தில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    அரியலூர் மாவட்டத்தில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    தா.பழூர்:

    தா.பழூர் பகுதியில் கடந்த மாதம் 22-ந் தேதி, சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தா.பழூரை சேர்ந்த கவுதம் (வயது 25), கவிமணி(21), ஜான்(21), ராமநாதன்(20) ஆகியோரை தா.பழூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் அவர்கள் 4 பேரும் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.

    இதேபோல் மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்(44), அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் கீழப்பழுவூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×