என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
மயிலாடுதுறையில் 3-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல் - பெண்கள் உள்பட 42 பேர் கைது
மயிலாடுதுறையில் 3-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து பெண்கள் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3-வது நாளாக நடந்த இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
அரசு துறையில் ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ேபாராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில அவர்களை் தங்க வைத்தனர்.
Next Story






