search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிவகாசி அருகே முதியவர் தற்கொலை

    சிவகாசி அருகெ முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட எரிச்சந்த்தம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 70). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி லட்சுமி இறந்துவிட்டார். இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வந்த தனது மகன் ரவிச்சந்திரன் குடும்பத்தினருடன், முனியாண்டி வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 21- ந்தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக் கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×