search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பொறையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருட்டு

    பொறையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். காட்டுசேரி வீட்டில் இருந்து வரும் இவருடைய மனைவி மணிமேகலை (வயது 34), தனது குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றார்.

    பின்னர் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. மேலும் வீட்டினுள் பீரோவை உடைக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

    இந்த சத்தம் கேட்டு மர்மநபர் வீட்டின் பின்புற கதவை திறந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து வீட்டின் பின்புற வாசல் வழியாக வீட்டிற்குள் சென்று மணிமேகலை பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து மணிமேகலை கொடுத்த புகாரின்பேரில் பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு ெ்சய்து, மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×