என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனாதொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 82 ஆயிரத்து 408 பேருக்கு பரிசோதனை செய்ததில் 16,513 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் 16,230 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,628 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

    மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,522 ஆக உயர்ந்துள்ளது.

    1,997 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 3,600- க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை இருந்தது. மாவட்டத்தில் கடந்த வாரம் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியாக எந்த பகுதியும் அறிவிக்கப்படாத நிலையில் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் நோய் பாதிப்பு பற்றிய உண்மை நிலையை அறிய முடியவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவப்பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் போது முழுமையாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×