search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

    உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் கீழவெளியை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 62), தத்தனூர் குடிகாட்டை சேர்ந்த உலகநாதன்(45), வானத்திரையான்பட்டிணத்தை சேர்ந்த வெண்ணிலா(40), காடுவெட்டாங்குறிச்சியை சேர்ந்த கோவிந்தசாமி(45) ஆகிய 4 பேரும் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×