என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் கார் தீப்பிடித்து எரிந்து டிராவல்ஸ் அதிபர் கருகி பலி
Byமாலை மலர்20 Jan 2021 8:43 AM GMT (Updated: 20 Jan 2021 8:43 AM GMT)
விருதுநகரில் இன்று அதிகாலை கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் டிராவல்ஸ் அதிபர் உடல் கருகி பலியானார்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் குருநாதன் (வயது 33). டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் மதுரைக்கு சவாரி செல்வதற்காக குருநாதன் தனது டாடா சுமோ காரில் புறப்பட்டார்.
எரிச்சநத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியானது.
இதனைத் தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குருநாதன் உடனே காரில் இருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவரால் கார் கதவை திறக்க முடியவில்லை.
ஒருபுறம் அவர் கதவை உடைத்து திறக்க முயலும் நேரத்தில் காரில் தீ மளமளவென பரவிக் கொண்டிருந்தது.
தீ விபத்தால் பதட்டத்தில் இருந்த குருநாதன் செல்போன் மூலம் தனது தந்தை முனியாண்டியை தொடர்பு கொண்டு கார் தீ விபத்துக்குள்ளானதும், தான் உள்ளே சிக்கியிருப்பதாகவும் அலறினார்.
உடனே அவரது தந்தை முனியாண்டி ஆட்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. காருக்குள் குருநாதன் தீயில் கருகி இறந்த கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மகன் இறந்ததை கண்டு முனியாண்டி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் குருநாதன் (வயது 33). டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் மதுரைக்கு சவாரி செல்வதற்காக குருநாதன் தனது டாடா சுமோ காரில் புறப்பட்டார்.
எரிச்சநத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியானது.
இதனைத் தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குருநாதன் உடனே காரில் இருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவரால் கார் கதவை திறக்க முடியவில்லை.
ஒருபுறம் அவர் கதவை உடைத்து திறக்க முயலும் நேரத்தில் காரில் தீ மளமளவென பரவிக் கொண்டிருந்தது.
தீ விபத்தால் பதட்டத்தில் இருந்த குருநாதன் செல்போன் மூலம் தனது தந்தை முனியாண்டியை தொடர்பு கொண்டு கார் தீ விபத்துக்குள்ளானதும், தான் உள்ளே சிக்கியிருப்பதாகவும் அலறினார்.
உடனே அவரது தந்தை முனியாண்டி ஆட்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. காருக்குள் குருநாதன் தீயில் கருகி இறந்த கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மகன் இறந்ததை கண்டு முனியாண்டி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X