search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    செந்துறை அருகே ஏரியில் மூழ்கி சிறுமி பலி

    செந்துறை அருகே விளையாடியபோது தவறி விழுந்த சிறுமி ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு ஹன்சிகா(வயது 6), தனவர்தினி(5) என 2 மகள்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை அவர்களது வீட்டின் அருகே உள்ள சமாதிகுட்டை ஏரிக்கரையில் ஹன்சிகா, குணபிரியன்(5), ராஜபிரகதி(5), தனவர்தினி ஆகிய 4 பேர் விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஹன்சிகா, குணபிரியன், ராஜபிரகதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஏரியில் தவறி விழுந்து மூழ்கினர். இதைக்கண்ட தனவர்தினி ஓடி வந்து கிராம மக்களிடம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கிராம மக்கள் விரைந்து வந்து ஏரியில் குதித்து 3 பேரையும் மீட்டு செந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஹன்சிகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். குணபிரியன், ராஜபிரகதி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரும்புலிகுறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×