என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழப்பழுவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை
Byமாலை மலர்19 Jan 2021 8:58 AM GMT (Updated: 19 Jan 2021 8:58 AM GMT)
கீழப்பழுவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல வண்ணம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜின் மகன் பழனிசாமி(வயது 35). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை அவர் தினமும் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று மேலவண்ணம் கிராமத்தில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் சாலைகளின் இடையே உள்ள தரிசு நிலங்களுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். அங்கு நேற்று மாலை அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் அவர்கள், பழனிசாமியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றனர். அவ்வழியே சென்றவர்கள், உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிசாமியை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல வண்ணம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜின் மகன் பழனிசாமி(வயது 35). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை அவர் தினமும் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று மேலவண்ணம் கிராமத்தில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் சாலைகளின் இடையே உள்ள தரிசு நிலங்களுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். அங்கு நேற்று மாலை அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் அவர்கள், பழனிசாமியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றனர். அவ்வழியே சென்றவர்கள், உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிசாமியை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X