search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    செங்கல்பட்டில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை துறை அதிகாரி கைது

    தடையில்லா சான்று கொடுப்பதற்கு ரூ,20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
    செங்கல்பட்டு:

    சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 52). இவர் காட்டாங்குளத்தூர் அடுத்த நின்னக்கரை பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக தடையில்லாச்சான்று பெற செங்கல்பட்டு திம்மாவரத்தில் உள்ள செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

    அங்கு வேளாண்மை துணை இயக்குனராக பணிபுரியும் சுகுமாரன் (56) என்பவர் தடையில்லா சான்று கொடுப்பதற்கு அவரிடம் ரூ,20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    புகாரின் பேரில், காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் ஆனந்தனிடம் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டு்களை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுகுமாரனிடம் ஆனந்தன் லஞ்சம் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் சுகுமாரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×