search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 750 பேர் பலி - ஒரே நாளில் 44 பேர் பாதிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 609 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 441 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 750 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். 418 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 970 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 317 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 435 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×