என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்திராயிருப்பு பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
Byமாலை மலர்10 Jan 2021 12:47 PM GMT (Updated: 10 Jan 2021 12:47 PM GMT)
வத்திராயிருப்பு பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் தயாராகி வருகின்றன.
வத்திராயிருப்பு:
தென் மாவட்டங்களில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல்பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
இந்த போட்டிகளில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்பது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வத்திராயிருப்பு, சேது நாராயணபுரம், மகாராஜபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல் பயிற்சி, மண் குத்துதல் பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
மேலும் மாடுகளுக்கு சத்தான உணவு வகைகளான பாதாம், முந்திரி, பேரீச்சம் பழம், பருத்திக்கொட்டை, புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் தினமும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் வயல் வெளிகளில் தற்காலிக வாடிவாசல் அமைத்து மாடு பிடிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா விதிகளின் கட்டுப்பாடுகளின் படி ஒரு மாட்டுடன் இருவர் தான் வரவேண்டும் என்பன உள்பட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே புதிய விதிமுறைகளை தளர்த்தி விட்டு, பழைய நடைமுறைகளின் படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என மாட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X