என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்9 Jan 2021 11:30 PM GMT (Updated: 9 Jan 2021 11:30 PM GMT)
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 412 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,437 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 16,108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,413 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 100 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமை படுத்தப்படவில்லை.
மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,445 ஆக உயர்ந்துள்ளது.
1,652 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 3,400-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் இருந்தது. மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தொடர்ந்து தாமதமாகும் நிலையே இருந்து வருகிறது. இதனால் நோய் பரவல் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
அரசு விதிமுறைப்படி நகர்ப்பகுதிகளில் ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டால் அந்தப்பகுதியினை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கவேண்டும்.
அருப்புக்கோட்டையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்ப்பட்டது. தற்போது அந்த பகுதி காலதாமதமாக கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக நகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வதுடன் நோய் தடுப்பு வழி முறைகளையும் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 412 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,437 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 16,108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,413 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 100 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமை படுத்தப்படவில்லை.
மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,445 ஆக உயர்ந்துள்ளது.
1,652 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 3,400-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் இருந்தது. மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தொடர்ந்து தாமதமாகும் நிலையே இருந்து வருகிறது. இதனால் நோய் பரவல் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
அரசு விதிமுறைப்படி நகர்ப்பகுதிகளில் ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டால் அந்தப்பகுதியினை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கவேண்டும்.
அருப்புக்கோட்டையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்ப்பட்டது. தற்போது அந்த பகுதி காலதாமதமாக கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக நகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வதுடன் நோய் தடுப்பு வழி முறைகளையும் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X