என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 421 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 317 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 16 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 739 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 83 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
இம்மாவட்டத்தில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது. 1,685 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் 2 ஆயிரம் பேருக்கு முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் நேற்று 1,700 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை.
பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் மாவட்ட சுகாதாரத்துறை போதிய அக்கறை கொள்ளாத நிலையே உள்ளது. தமிழக அரசு மருத்துவப் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ள நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்காத நிலையே நீடிக்கிறது.
மேலும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் முற்றிலுமாக கிருமிநாசினி தெளிக்கும் நடைமுறை உள்ளாட்சி அமைப்புகளால் கைவிடப்பட்டது. மாவட்ட நிர்வாகமும் இதற்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்காத நிலையே உள்ளது. மொத்தத்தில் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளும், நோய் தடுப்பு விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்படாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 421 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 317 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 16 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 739 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 83 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
இம்மாவட்டத்தில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது. 1,685 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் 2 ஆயிரம் பேருக்கு முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் நேற்று 1,700 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை.
பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் மாவட்ட சுகாதாரத்துறை போதிய அக்கறை கொள்ளாத நிலையே உள்ளது. தமிழக அரசு மருத்துவப் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ள நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்காத நிலையே நீடிக்கிறது.
மேலும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் முற்றிலுமாக கிருமிநாசினி தெளிக்கும் நடைமுறை உள்ளாட்சி அமைப்புகளால் கைவிடப்பட்டது. மாவட்ட நிர்வாகமும் இதற்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்காத நிலையே உள்ளது. மொத்தத்தில் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளும், நோய் தடுப்பு விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்படாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story






