என் மலர்
செய்திகள்

கைது
சிவகாசி அருகே மது விற்ற 5 பேர் கைது
சிவகாசி அருகே மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இதில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அழகர்சாமி (வயது 38), முனியாண்டி (59), முருகன் (33), மாரிமுத்து (52), பழனிமுருகன் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






