என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு அருகே 2 சிறுமிகள் மரணத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தக்கோரியும், சிறுமிகளின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக்கோரியும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆமைப்பாக்கம் கிராமத்தில் கடந்த மாதம் பிரியங்கா, செண்பகவல்லி என 2 சிறுமிகள் மர்மமான முறையில் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர். இது குறித்து சட்ராஸ் போலீஸ் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த 2 சிறுமிகள் மரணத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தக்கோரியும், சிறுமிகளின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக்கோரியும், குற்றவாளிகளை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story