என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 167 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 157 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 15 ஆயிரத்து 841 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3262 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை. வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப் படவில்லை.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 16 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது. 1,310 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 3,200-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை பரிசோதனை முடிவுகளை தாமதமாக அறிவிப்பதுடன், தெரிவிக்கும் முடிவுகளையும் முழு விவரங்களுடன் தெரிவிக்காத நிலையே நீடிக்கிறது. இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பொது இடங்களில் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 167 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 157 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 15 ஆயிரத்து 841 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3262 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை. வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப் படவில்லை.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 16 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது. 1,310 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 3,200-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை பரிசோதனை முடிவுகளை தாமதமாக அறிவிப்பதுடன், தெரிவிக்கும் முடிவுகளையும் முழு விவரங்களுடன் தெரிவிக்காத நிலையே நீடிக்கிறது. இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பொது இடங்களில் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
Next Story






