search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தற்கொலை

    வில்லியனூர் அருகே மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுகுமார் (வயது29). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கீதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இதனால் கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உருவாகி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுகுமாரிடம் கோபித்துக் கொண்டு அவரது மனைவி கீதா தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி கோபித்து சென்றது முதல் சுகுமார் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை முடிவை கையில் எடுத்த சுகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×