என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தற்கொலை தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2020/Dec/202012111806448440_Tamil_News_Tamil-News-Young-Woman-Suicide-in-Thavalakuppam_SECVPF.gif)
X
தற்கொலை
தவளக்குப்பத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
By
மாலை மலர்11 Dec 2020 12:36 PM GMT (Updated: 11 Dec 2020 12:36 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தவளக்குப்பத்தில் வேலைக்கு செல்ல தாய் அனுமதிக்க மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
தவளக்குப்பம் சதாநகரை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் அப்பகுதியில் பகுதியில் உள்ள ஒரு அரிசிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர்களது மகள் திவ்யபாரதி (வயது19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இதற்கிடையே திவ்யபாரதி வேலைக்கு செல்ல விரும்பினார். ஆனால் அவரது தாயார் பாக்கியலட்சுமி வேலைக்கு செல்லவேண்டாம் எனக்கூறி மேற்கொண்டு படிக்குமாறு அறிவுறுத்தி வந்தார்.
இதனால் திவ்யபாரதி மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்றும் இதுதொடர்பாக திவ்யபாரதி தனது தாயிடம் வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு பாக்கியலட்சுமி எதிர்ப்பு தெரிவித்து விட்டு வழக்கம்போல அரிசி கடைக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த திவ்யபாரதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு மின்விசிறி கொக்கியில் தனது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பாக்கியலட்சுமி வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது திவ்யபாரதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தவளக்குப்பம் சதாநகரை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் அப்பகுதியில் பகுதியில் உள்ள ஒரு அரிசிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர்களது மகள் திவ்யபாரதி (வயது19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இதற்கிடையே திவ்யபாரதி வேலைக்கு செல்ல விரும்பினார். ஆனால் அவரது தாயார் பாக்கியலட்சுமி வேலைக்கு செல்லவேண்டாம் எனக்கூறி மேற்கொண்டு படிக்குமாறு அறிவுறுத்தி வந்தார்.
இதனால் திவ்யபாரதி மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்றும் இதுதொடர்பாக திவ்யபாரதி தனது தாயிடம் வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு பாக்கியலட்சுமி எதிர்ப்பு தெரிவித்து விட்டு வழக்கம்போல அரிசி கடைக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த திவ்யபாரதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு மின்விசிறி கொக்கியில் தனது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பாக்கியலட்சுமி வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது திவ்யபாரதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)