என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நோய் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாத நிலையே நீடிக்கிறது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 257 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 50 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 15 ஆயிரத்து 685 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 473பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 137 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை.
இந்த நிலையில் இம்மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 67 ஆக உயர்ந்துள்ளது. 1,523 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 1,400-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை.
மாவட்டத்தில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவ பரிசோதனை முடிவுகளும் உடனுக்குடன் தெரிவிக்கப்படுவதில்லை. மேலும் பாதிப்படைந்தோர் பட்டியலில் முழு விவரங்களும் தெரிவிக்கப்படுவதில்லை. தொடர்ந்து மாவட்ட சுகாதார துறையின் பட்டியல் மாநில பட்டியலில் இருந்து முரண்பட்டு காணப்படுகிறது.
வெளியிடப்படும் பட்டியல் வெளிப்படைத் தன்மையுடன் இல்லாததால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத நிலை தொடர்கிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
மாவட்ட சுகாதாரத்துறை தினசரி நோய் பாதிப்பு ஏற்படுபவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கவோ அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையே நீடிக்கிறது.
எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நோய் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மக்களும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 257 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 50 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 15 ஆயிரத்து 685 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 473பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 137 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை.
இந்த நிலையில் இம்மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 67 ஆக உயர்ந்துள்ளது. 1,523 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 1,400-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை.
மாவட்டத்தில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவ பரிசோதனை முடிவுகளும் உடனுக்குடன் தெரிவிக்கப்படுவதில்லை. மேலும் பாதிப்படைந்தோர் பட்டியலில் முழு விவரங்களும் தெரிவிக்கப்படுவதில்லை. தொடர்ந்து மாவட்ட சுகாதார துறையின் பட்டியல் மாநில பட்டியலில் இருந்து முரண்பட்டு காணப்படுகிறது.
வெளியிடப்படும் பட்டியல் வெளிப்படைத் தன்மையுடன் இல்லாததால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத நிலை தொடர்கிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
மாவட்ட சுகாதாரத்துறை தினசரி நோய் பாதிப்பு ஏற்படுபவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கவோ அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையே நீடிக்கிறது.
எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நோய் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மக்களும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும்.
Next Story






