என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வயல்கள், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
Byமாலை மலர்5 Dec 2020 3:28 PM GMT (Updated: 5 Dec 2020 3:28 PM GMT)
அரியலூர் அருகே வயல்கள், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர்:
‘புரெவி’ புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக கீழகொளத்தூர்- திருமானூர் செல்லும் சாலையில் தரைப்பாலம் வழியாக வயல்களில் இருந்து வழிந்தோடும் மழைநீர் குறித்து கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், விவசாய பணிகள் பாதிக்காத வகையில் மழைநீரை பொக்லைன் எந்திரங்களை கொண்டு வயல்வெளிகளில் இருந்து விரைவாக வெளியேற்றிட வேண்டும், என்றார். சுள்ளங்குடியில் செல்லும் சாலையினை பார்வையிட்ட அவர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்றிடவும், தேவையான இடங்களில் வாய்க்கால்களை சீரமைத்து, மழைநீரை வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், காட்டூர் ஏரி மற்றும் காசாங்காட்டேரி உள்ளிட்ட ஏரிகளை ஆய்வு செய்த அவர் தொடர்ந்து மழைநீர் வரத்தை கண்காணித்திடவும், அதற்கேற்ற உபரிநீரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றிடவும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட முட்டுவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X