search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

    திருத்தங்கல் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் கணேசன் மகன் முனீஸ்வரன் (வயது 29). இவர் திருத்தங்கல்- செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த சுப்புராஜ் (41) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி முனீஸ்வரன் சட்டைபையில் இருந்த ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து முனீஸ்வரன், திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுப்புராஜை கைது செய்தனர்.
    Next Story
    ×