என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீன்சுருட்டி அருகே தீக்குளித்த கர்ப்பிணி உயிரிழப்பு
Byமாலை மலர்28 Nov 2020 9:56 AM GMT (Updated: 28 Nov 2020 9:56 AM GMT)
மீன்சுருட்டி அருகே தீக்குளித்த கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
மீன்சுருட்டி:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருணாகரநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த சுந்தரேசன்-முத்துலட்சுமி தம்பதியின் மகள் பிரியா(வயது 22). பி.எஸ்சி நர்சிங் முடித்த இவருக்கும், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு மெயின் ரோடு தெருவை சேர்ந்த அம்பலவாணன் மகன் பிரபாகரனுக்கும், கடந்த ஜனவரி 1-ந் தேதி திருமணம் நடைபெற்றது. பிரியா தற்போது கர்ப்பமாக இருந்தார். பிரபாகரன் கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவர் கிடைத்த வருமானத்தில் மது அருந்தி விட்டு வருவாராம். இதனை பிரியா கண்டித்துள்ளார்.
இருந்தாலும் அவர் தொடர்ந்து மது அருந்தி விட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், மனம் உடைந்த பிரியா கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து பிரியாவின் தாய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி விசாரணை நடத்தி வருகிறார். பிரியாவிற்கு திருமணமாகி சில மாதங்களே ஆவதால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X