என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவ துறையில் தமிழக அரசு சாதனை படைத்து வருகிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Byமாலை மலர்28 Nov 2020 6:37 AM GMT (Updated: 28 Nov 2020 6:37 AM GMT)
மருத்துவ துறையில் தமிழக அரசு சாதனை படைத்து வருகிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் எண்ணற்ற பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்தநிலையில் இந்த அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இலவச கண் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 1.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கண் நோய் சிகிச்சை பிரிவில் கண் புரை அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த கண் சிகிச்சை பிரிவில் 20 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையை குத்து விளக்கு ஏற்றி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் தலைமையில், தலைமை மருத்துவர் பாபுஜி உள்பட ஏராளமான மருத்துவர்கள் கண் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் தமிழகத்தில் மருத்துவ துறையில் சாதனைகள் நடைபெற்று வருகிறது. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக தனியாக ஒரு பிரிவு தொடக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனே பார்வையிட்டு, நிவாரணம் வழங்கினார்.
தேர்தல் வருகிறது என்பதற்காக மு.க.ஸ்டாலின் தற்போது மக்களுக்கு சேவை செய்து வருகிறார். யார் என்ன செய்தார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
108 ஆம்புலன்ஸ் சேவைகளை பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
விழாவில் கலெக்டர் கண்ணன், தாசில்தார் ஸ்ரீதரன், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், நகர செயலாளர் ராணாபாஸ்கரராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.குருசாமி, நகர பேரவை செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் ராஜா, கூட்டுறவு பால் சொசைட்டி சங்க தலைவர் வனராஜ், தொகுதி பொறுப்பாளரும், பால் கூட்டுறவு சங்க துணை தலைவருமான கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றிய பிரமுகர் நவரத்தினம், அவைத்தலைவர் பரமசிவம், பேரவை செயலாளர் ராஜ்குமார், சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜாபண்டியன், நடிகர் விஜயகுமார், செட்டியார்பட்டி நகர செயலாளர் அங்குத்துரை, சேத்தூர் கூட்டுறவு சங்க தலைவர் பட்டுராஜன், மற்றும் நகர ஒன்றிய மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் எண்ணற்ற பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்தநிலையில் இந்த அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இலவச கண் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 1.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கண் நோய் சிகிச்சை பிரிவில் கண் புரை அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த கண் சிகிச்சை பிரிவில் 20 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையை குத்து விளக்கு ஏற்றி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் தலைமையில், தலைமை மருத்துவர் பாபுஜி உள்பட ஏராளமான மருத்துவர்கள் கண் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் தமிழகத்தில் மருத்துவ துறையில் சாதனைகள் நடைபெற்று வருகிறது. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக தனியாக ஒரு பிரிவு தொடக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனே பார்வையிட்டு, நிவாரணம் வழங்கினார்.
தேர்தல் வருகிறது என்பதற்காக மு.க.ஸ்டாலின் தற்போது மக்களுக்கு சேவை செய்து வருகிறார். யார் என்ன செய்தார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
108 ஆம்புலன்ஸ் சேவைகளை பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
விழாவில் கலெக்டர் கண்ணன், தாசில்தார் ஸ்ரீதரன், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், நகர செயலாளர் ராணாபாஸ்கரராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.குருசாமி, நகர பேரவை செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் ராஜா, கூட்டுறவு பால் சொசைட்டி சங்க தலைவர் வனராஜ், தொகுதி பொறுப்பாளரும், பால் கூட்டுறவு சங்க துணை தலைவருமான கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றிய பிரமுகர் நவரத்தினம், அவைத்தலைவர் பரமசிவம், பேரவை செயலாளர் ராஜ்குமார், சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜாபண்டியன், நடிகர் விஜயகுமார், செட்டியார்பட்டி நகர செயலாளர் அங்குத்துரை, சேத்தூர் கூட்டுறவு சங்க தலைவர் பட்டுராஜன், மற்றும் நகர ஒன்றிய மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X