என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்27 Nov 2020 1:20 AM GMT (Updated: 27 Nov 2020 1:20 AM GMT)
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 10 ஆயிரத்து 220 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15 ஆயிரத்து 818 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. 15 ஆயிரத்து 524 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,675 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. 66 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 15-க்கும் கீழ் நோய் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் சற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை எச்சரிக்கையாக கொண்டு மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனைகளை அதிகரிப்பதுடன் சோதனை முடிவுகளையும் உடனுக்குடன் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X