search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கல்பாக்கம் அருகே கார் டிரைவர் தற்கொலை

    கல்பாக்கம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பொம்மராஜபுரம் பகுதி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 33) கார் டிரைவரான இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரம் அடைந்த குமார் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×