என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் மாவட்டத்தில், பலத்த மழைக்கு 3 கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன
Byமாலை மலர்26 Nov 2020 12:49 PM GMT (Updated: 26 Nov 2020 12:49 PM GMT)
அரியலூர் மாவட்டத்தில் பலத்த மழைக்கு 3 கூரை வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தன.
அரியலூர்:
‘நிவர்‘ புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதே போல் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் போது நாகமங்கலம் இந்திரா நகரில் வசித்து வரும் ரோஸ்லி என்பவரது கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது.
நேற்று பகலில் பெய்த பலத்த மழையின் போது ரெட்டிபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவரின் கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவரும், மாலையில் பெய்த மழையில் வைப்பூர் நடுத்தெருவை சேர்ந்த திலிப்குமாரின் கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவரும் இடிந்து விழுந்தது.
எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்களில் செல்ல முடியாமல் மழைநீர் தேங்கியிருந்தன.
அதனை தொடர்ந்து வாய்க்கால்கள் பொக்லைன் எந்திரத்தை வைத்து தூர்வாரி மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X