என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை-கணக்கில் வராத பணம் பறிமுதல்
Byமாலை மலர்20 Nov 2020 6:55 AM GMT (Updated: 20 Nov 2020 6:55 AM GMT)
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக குறிப்பிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு உள்ள நில அளவை பிரிவு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தலைமை சர்வேயர் பாலசுப்ரமணியன் மற்றும் 7 பேர் இருந்தனர். அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. அலுவலகத்தில் ஊழியர் அல்லாத சிவகாசியை சேர்ந்த பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோரும் இருந்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில் பொன்ராஜிடம் 57 ஆயிரம் இருந்தது. இவை அனைத்தும் ரூ.2 ஆயிரம், ரூ 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
இதேபோல் ஆறுமுகத்திடம் ரூ. 39 ஆயிரம் இருந்தது. இதில் ரூ 26 ஆயிரத்து 500 ரூபாய் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட அதற்கான ரசீது இருந்தது. மீதமுள்ள பணம் 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கு உரிய கணக்கில்லை.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக குறிப்பிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு உள்ள நில அளவை பிரிவு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தலைமை சர்வேயர் பாலசுப்ரமணியன் மற்றும் 7 பேர் இருந்தனர். அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. அலுவலகத்தில் ஊழியர் அல்லாத சிவகாசியை சேர்ந்த பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோரும் இருந்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில் பொன்ராஜிடம் 57 ஆயிரம் இருந்தது. இவை அனைத்தும் ரூ.2 ஆயிரம், ரூ 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
இதேபோல் ஆறுமுகத்திடம் ரூ. 39 ஆயிரம் இருந்தது. இதில் ரூ 26 ஆயிரத்து 500 ரூபாய் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட அதற்கான ரசீது இருந்தது. மீதமுள்ள பணம் 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கு உரிய கணக்கில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X