என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம்
Byமாலை மலர்19 Nov 2020 2:13 PM GMT (Updated: 19 Nov 2020 2:13 PM GMT)
புதுச்சேரி அருகே ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழகம், புதுச்சேரியில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று நூதன போராட்டம் நடந்தது.
புதுவை அண்ணா சிலை அருகே இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட கொலையாளிகள் 7 பேரின் படம்கொண்ட முகக்கவசத்தை அணிந்து சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நிற்பதுபோன்ற அமைப்பினை உருவாக்கி இருந்தனர்.
இந்த போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தமிழக கவர்னர் அனுமதி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X