search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம்

    புதுச்சேரி அருகே ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழகம், புதுச்சேரியில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று நூதன போராட்டம் நடந்தது.

    புதுவை அண்ணா சிலை அருகே இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட கொலையாளிகள் 7 பேரின் படம்கொண்ட முகக்கவசத்தை அணிந்து சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நிற்பதுபோன்ற அமைப்பினை உருவாக்கி இருந்தனர்.

    இந்த போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தமிழக கவர்னர் அனுமதி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
    Next Story
    ×