search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரியலூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ராஜா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு மற்றும் ஜல் ஜீவன் மற்றும் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்கப்படவில்லை. ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு முறையாக வழங்கப்படவில்லை. ஊராட்சி செயலாளர்களுக்கு கடந்த 3 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை. 

    இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், ஒன்றிய பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்பது தொடர்பாகவும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்சாமி, செல்வம், கஸ்தூரி, முத்துலட்சுமி, அருள்மேரி, பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் முருகானந்தம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். முடிவில் இணை செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
    Next Story
    ×