என் மலர்
செய்திகள்

நெல்
நெல்லுக்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- வேளாண்துறை தகவல்
நெல்லுக்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் நெல் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளது.
ஆகவே சம்பா பருவ நெற்பயிர் பயிரிட்ட தகுதியான விவசாயிகள் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதியில் இயங்கும் உழவர் உதவியகங்களில் பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வருகிற 10-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ள இத்தருவாயில் சம்பா நெற் பயிருக்கான பயிர் காப்பீடு விண்ணப்பத்தையும் தங்கள் பகுதியில் உள்ள உழவர் உதவியகம் மூலம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் வேளாண் இயக் குனர் வசந்தகுமார் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆத்மா திட்டத்தின்கீழ் செயல்படும் விளைபொருள் ஆர்வலர் குழுமங்கள், சுய உதவி குழுக்கள், உணவு பாதுகாப்பு மகளிர் குழுக்களுக்கு மாட்டு தீவனப்புல் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மானியத்தொகையாக ஆண்டொன்றுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.800 வீதம் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயனடைய இவ்வாண்டில் புதியதாக தீவனப்புல் பயிரிட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற் கான விண்ணப்பத்தினை தங்கள் பகுதியில் செயல்படும் உழவர் உதவியகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 10-ந்தேதிக்குள் உழவர் உதவியக அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
புதுவை கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் நெல் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளது.
ஆகவே சம்பா பருவ நெற்பயிர் பயிரிட்ட தகுதியான விவசாயிகள் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதியில் இயங்கும் உழவர் உதவியகங்களில் பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வருகிற 10-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ள இத்தருவாயில் சம்பா நெற் பயிருக்கான பயிர் காப்பீடு விண்ணப்பத்தையும் தங்கள் பகுதியில் உள்ள உழவர் உதவியகம் மூலம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் வேளாண் இயக் குனர் வசந்தகுமார் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆத்மா திட்டத்தின்கீழ் செயல்படும் விளைபொருள் ஆர்வலர் குழுமங்கள், சுய உதவி குழுக்கள், உணவு பாதுகாப்பு மகளிர் குழுக்களுக்கு மாட்டு தீவனப்புல் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மானியத்தொகையாக ஆண்டொன்றுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.800 வீதம் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயனடைய இவ்வாண்டில் புதியதாக தீவனப்புல் பயிரிட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற் கான விண்ணப்பத்தினை தங்கள் பகுதியில் செயல்படும் உழவர் உதவியகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 10-ந்தேதிக்குள் உழவர் உதவியக அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story






