என் மலர்
செய்திகள்

கைது
மீன்சுருட்டி அருகே மது விற்றவர் கைது
மீன்சுருட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 31), வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






