search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

    விக்கிரமங்கலம் அருகே கடையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். இதில் ஸ்ரீபுரந்தான் மெயின் ரோட்டில் உள்ள சிராஜ்தீன்(வயது 42) என்பவரது மளிகை கடையில் சோதனை செய்தபோது, அங்கு புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிராஜ்தீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×