என் மலர்
செய்திகள்

உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறையின் ஆலோசனை குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.
உணவுப்பொருட்களில் கலப்படம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்- கலெக்டர் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஆலோசனை குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 561 வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து உணவு வணிக நிறுவனங்களிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தினமும் 2 முறை கிருமிநாசினியை கொண்டு வளாகத்தினை சுத்தம் செய்ய வேண்டும். கை கழுவும் இடம் மற்றும் நுழைவு வாயிலில் கிருமிநாசினி வைக்க வேண்டும். மேலும் கடந்த 4 மாதங்களில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, மொத்தம் 27 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
உணவுப்பொருட்கள் கலப்படம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் மாவட்ட நியமன அலுவலகத்திற்கு 04328-224033 என்ற தொலைபேசி எண்ணிலும், 94440 42322 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவும் தெரிவிக்கலாம், என்றார். கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீனிவாசன் (பெரம்பலூர் நகராட்சி), ரத்தினம் (வேப்பந்தட்டை), இளங்கோவன் (வேப்பூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஆலோசனை குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 561 வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து உணவு வணிக நிறுவனங்களிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தினமும் 2 முறை கிருமிநாசினியை கொண்டு வளாகத்தினை சுத்தம் செய்ய வேண்டும். கை கழுவும் இடம் மற்றும் நுழைவு வாயிலில் கிருமிநாசினி வைக்க வேண்டும். மேலும் கடந்த 4 மாதங்களில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, மொத்தம் 27 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
உணவுப்பொருட்கள் கலப்படம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் மாவட்ட நியமன அலுவலகத்திற்கு 04328-224033 என்ற தொலைபேசி எண்ணிலும், 94440 42322 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவும் தெரிவிக்கலாம், என்றார். கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீனிவாசன் (பெரம்பலூர் நகராட்சி), ரத்தினம் (வேப்பந்தட்டை), இளங்கோவன் (வேப்பூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story