என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காவல் கட்டுப்பாட்டு அறையில் 12 போலீசாருக்கு கொரோனா

    புதுவை காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் போலீசார் 12 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றுக்கு முன்கள பணியாளர்களான சுகாதாரம், காவல்துறை, வருவாய்த்துறையினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவை காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் போலீசார் 12 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு தொற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களுக்கான சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. சுமார் 70 பேர் பணிபுரியும் இந்த கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் போலீசார் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

    கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் போலீசார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் போலீசாருக்கு விடுமுறை அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
    Next Story
    ×