என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை- புதுவை கோர்ட்டு தீர்ப்பு
Byமாலை மலர்15 Aug 2020 11:22 AM GMT (Updated: 15 Aug 2020 11:22 AM GMT)
நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாகூர் குடியிருப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுவேதன் (வயது 19). இவரும், பாகூர் இருளன்சந்தை பகுதியை சேர்ந்த வினோத்குமாரும் (30) நண்பர்கள் ஆவர். பின்னர் சுவேதன் எதிர்தரப்பை சேர்ந்தவர்களுடன் பழகி வந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
வினோத்குமார், கடந்த 10.5.2017 அன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து பாகூர் ஏரிக்கையில் மது குடித்தார். அப்போது சுவேதனை அங்கு வரவழைத்து அவரையும் மது குடிக்க வைத்தனர். பின்னர் முன்விரோத கோபத்தில் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் அவரது தலையை துண்டித்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார், அவரது நண்பர்கள் தாஸ் (20), சர்மா என்கிற சர்மாவாணன் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் நீதிபதி தனபால் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில், குற்றவாளி வினோத்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தனபால் தீர்ப்பளித்தார். தாஸ், சர்மா ஆகிய 2 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் என்.கே.பெருமாள் ஆஜரானார்.
வினோத்குமார் ஏற்கனவே ஒரு வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது காலாப்பட்டு சிறையில் உள்ளார். அவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு, 4 வழிப்பறி வழக்கு, 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
புதுச்சேரி பாகூர் குடியிருப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுவேதன் (வயது 19). இவரும், பாகூர் இருளன்சந்தை பகுதியை சேர்ந்த வினோத்குமாரும் (30) நண்பர்கள் ஆவர். பின்னர் சுவேதன் எதிர்தரப்பை சேர்ந்தவர்களுடன் பழகி வந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
வினோத்குமார், கடந்த 10.5.2017 அன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து பாகூர் ஏரிக்கையில் மது குடித்தார். அப்போது சுவேதனை அங்கு வரவழைத்து அவரையும் மது குடிக்க வைத்தனர். பின்னர் முன்விரோத கோபத்தில் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் அவரது தலையை துண்டித்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார், அவரது நண்பர்கள் தாஸ் (20), சர்மா என்கிற சர்மாவாணன் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் நீதிபதி தனபால் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில், குற்றவாளி வினோத்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தனபால் தீர்ப்பளித்தார். தாஸ், சர்மா ஆகிய 2 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் என்.கே.பெருமாள் ஆஜரானார்.
வினோத்குமார் ஏற்கனவே ஒரு வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது காலாப்பட்டு சிறையில் உள்ளார். அவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு, 4 வழிப்பறி வழக்கு, 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X