search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை   கோப்புப்படம்
    X
    கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

    அரியலூரில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று

    அரியலூர் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 20 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகள், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 6 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 9 பேருக்கும் என மொத்தம் 69 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,642 ஆக உயர்ந்துள்ளது. 1,194 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 378 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.
    Next Story
    ×