என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரைப்பாலம்
    X
    தரைப்பாலம்

    புதிய தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தல்

    புதிய தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பிலிச்சுக்குழி ஊராட்சியை சேர்ந்த ஒக்கநத்தம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆதிதிராவிடர் தெருவில் இருந்து பஸ் நிறுத்தம் செல்லும் சாலையை பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி, மாணவ- மாணவிகள் என அனைவரும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சாலை இடையே ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மழைநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சிறு தரைப்பாலம், சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் இடிந்தது. இதனால் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்பவர்கள் பாலத்தை கடக்கும்போது தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிய தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×