search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதிதாக 298 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் விருதுநகரில் 13 பேர் பலி

    விருதுநகர் மாவட்டத்தில் 13 பேரும், மதுரை மாவட்டத்தில் 6 பேரும் நேற்று கொரோனாவுக்கு பலியாயினர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த 51 வயது நபர், எம்.ஆர்.நகரை சேர்ந்த 58 வயது நபர், திருத்தங்கல் நாடார் தெருவை சேர்ந்த 68 வயது முதியவர், விஸ்வநத்தத்தை சேர்ந்த 61 வயது நபர், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 44 வயது பெண், சித்துராஜபுரத்தை சேர்ந்த 36 வயது பெண், ராமசாமிநகரை சேர்ந்த 29 வயது பெண், பராசக்தி காலனியை சேர்ந்த 41 வயது நபர், திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்த 32 வயது நபர், அனுப்பன்குளம் அகதிகள் முகாமை சேர்ந்த 40 வயது நபர், 29 வயது பெண், 7 வயது சிறுமி, சிவகாசி பட்டாசு ஆலை அலுவலகத்தில் பணியாற்றும் 34, 40, 59 வயது நபர்கள், 39, 47 வயது பெண்கள், திருத்தங்கலை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ராஜபாளையத்தில் 12 நூற்பாலை ஊழியர்கள் உள்பட 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 9 பேர், புதுசூரங்குடியை சேர்ந்த 4 பேர், துலுக்கப்பட்டியை சேர்ந்த 4 பேர், கருவேலக்குடியை சேர்ந்த 12 பேர், நரிக்குடியை சேர்ந்த 8 பேர், ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 21, 23 வயது பெண்கள், 56, 40, 35, 25, 23, 41 வயது நபர்கள் உள்பட 191 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,568 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிராம பகுதிகளை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். கிராமப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பஞ்சாயத்து அளவில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது.

    மதுரையில் நேற்று 107 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 80 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 463 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 334 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். 380 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், 83 பேர் தனியார் மருத்துவமனையிலும் குணமடைந்தனர். இவர்களுடன் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 452 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1265 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

    இதனிடையே மதுரையில் நேற்று ஒரே நாளில் 63, 66, 64, 70, 81 வயது முதியவர்கள், 38 வயது பெண் ஆகிய 6 பேர் கொரோனா பாதிப்பால் இறந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை கொரோனாவுக்கு 288 பேர் பலியாகி உள்ளனர்.
    Next Story
    ×