என் மலர்
செய்திகள்

கொரோனா பரிசோதனை கோப்புப்படம்
அரியலூரில் ஜவுளிக்கடையில் மேலும் 33 பேருக்கு கொரோனா
அரியலூரில், ஜவுளிக்கடையில் பணிபுரிந்த மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெரம்பலூரில் வங்கி மேலாளர் உள்பட மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியானது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 29 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் அரியலூர் கடைவீதியில் உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்த 20 பேர் அடங்குவர். இந்நிலையில் அதே கடையில் பணிபுரிந்த மேலும் 33 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் மாவட்டத்தில் மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 39 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெரம்பலூர் சிவன்கோவில் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளரான, பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஆவார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளரான 28 வயது வாலிபருக்கும், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமாந்துறை ரோவர் நகரை சேர்ந்த 28 வயது பிரசவித்த பெண்ணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியாற்றிய வங்கி 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 29 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் அரியலூர் கடைவீதியில் உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்த 20 பேர் அடங்குவர். இந்நிலையில் அதே கடையில் பணிபுரிந்த மேலும் 33 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் மாவட்டத்தில் மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 39 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெரம்பலூர் சிவன்கோவில் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளரான, பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஆவார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளரான 28 வயது வாலிபருக்கும், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமாந்துறை ரோவர் நகரை சேர்ந்த 28 வயது பிரசவித்த பெண்ணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியாற்றிய வங்கி 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.
Next Story






