search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

    மதுராந்தகம் பெண் உயிரிழப்பு- திமுக நிர்வாகி கைது

    மதுராந்தகம் பெண் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி தேவேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தில் தனது தங்கையின் இறப்பில் மர்மம் இருப்பதால் மீண்டும் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெண்ணின் சகோதரர் சுடுகாட்டில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.

    இதையடுத்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் இடைக்கழிநாடு பேரூர்க்கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.தேவேந்திரன், டி.புருஷோத்தமன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவர்கள் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி தேவேந்திரனை போலீசார்  கைது செய்யப்பட்டார்.  சென்னை வியாசர்பாடியில் பதுங்கியிருந்த தேவேந்திரனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.   இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அவரது சகோதரர் புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில் தேவேந்திரன் கைது செய்யப்பட்டார். 

    கைது செய்யப்பட்ட தேவேந்திரனிடம்  போலீசார்  தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர் 
    Next Story
    ×