search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    ஊராட்சி மன்ற அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

    சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கல் பனா சசிகுமார். இந்நிலையில் ஊராட்சி மன்றத்திற்குட் பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. அதே பகுதியில் முன்னாள் கவுன் சிலர் ஒருவரின் பண்ணை குட்டை வெட்டுவது தொடர் பாக ஊராட்சி மன்ற தலை வருக்கும், ஊராட்சி செயலாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து ஊராட்சி உதவி இயக்குனர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுகளத் தூர் ஊராட்சி மன்ற தலை வரின் மாமனார் தமிழரசன் 100 நாள் வேலை நடைபெற்ற இடத்திற்கு சென்று, பண்ணை குட்டை வெட்டுவது தொடர்பாக வேலை செய்த பெண்களை தகாத வார்த்தைகளால் திட் டியதாக கூறப்படுகிறது. இதனை ஊராட்சி மன்ற 9-வார்டு உறுப்பினர் செல்வ குமார் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட் டது. இதுகுறித்து கிராம நாட்டாண்மைகள் 2 தரப் பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

    இதனை ஊராட்சி மன்ற தலைவர் தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக 2 தரப்பினரும் தனித்தனியாக செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் ஒருதரப் பினர் ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் கொடுத் தார். இந்த நிலையில் நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கிராம மக்களுக்கும், கிராம நாட் டாண்மைகளுக்கும் மதிப் பளிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த செந்துறை போலீசார் போராட்டக்காரர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு திரு மேனி செந்துறை போலீஸ் நிலையம் வந்து, 2 தரப்பின ரை யும் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 2 தரப்பினரும் கொடுத்த புகார்களில் உண்மை இல்லை என்பதை தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு திரு மேனி 2 தரப்பினரையும் எச்சரிக்கை செய்து ஊராட்சி பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.
    Next Story
    ×