search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மைபணியாளர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மைபணியாளர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 468 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 450 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணி புரியும் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த 54 வயது பெண், காமராஜபுரத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் மற்றும் மஸ்கட்டில் இருந்து திரும்பி வந்த கரையான்குறிச்சியை சேர்ந்த 1 வயது ஆண் குழந்தை மற்றும் அயன்சுத்தமல்லியை சேர்ந்த 70 வயது பெண், அரியலூர் குருவாலப்பர் கோவில் தெருவை சேர்ந்த 19 வயது கர்ப்பிணி பெண், வஞ்சினாபுரத்தை சேர்ந்த 28 வயது ஆண், காவனூரை சேர்ந்த 34 வயது பெண் ஆகிய 7 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவர்களில் 6 பேர் பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 293 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×