என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 202 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,253 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாலை வரை 82,275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1079 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர்.

    சென்னையில் மட்டும் 53762 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 31858 பேர் குணமடைந்துள்ளனர். 809 பேர் உயிரிழந்துள்ளனர். 21094 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     
    இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 5,051 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 202 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,253 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×